உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்த்திகேயன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்திய காட்சி.

பாளை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்- கலெக்டர் கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Published On 2023-08-15 09:13 GMT   |   Update On 2023-08-15 09:13 GMT
  • கலெக்டர் கார்த்திகேயன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
  • விழாவில் மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லை:

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்பட்டது.

நெல்லை

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை 9.05 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வை யிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உடன் சென்றார். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதன்பின்னர் என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். மாற்றுத்தி றனாளிகள் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 9 துறைகள் சார்பில் பயனாளி களுக்கு நலத்திட்டங்களை அவர் வழங்கினார். இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, மின்கல தெளிப்பான், மாற்றுத்தி றனாளி களுக்கான ஸ்கூட்டர், உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இவ்வாறாக மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகி யோரின் பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 257 பேருக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கும் சிறப்பாக பணியாற்றியமைக்காக கலெக்டர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொதுமக்கள் கேலரியில் அமர்ந்து கண்டுகளித்தனர். இதில் வடக்கு செழியநல்லூர், சந்திப்பு மீனாட்சிபுரம், கல்லணை அரசு பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 950 மாணவிகள் நடனம் ஆடினர். சுமார் 90 மாணவிகள் உட ற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

3 அடுக்கு பாதுகாப்பு

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்கு மார், உதவி கலெக்டர்கள் முகமது சபீர் ஆலம் (சேரன்மாதேவி), மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், பழைய பேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அருளானந்தம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை யொட்டி பாளை யங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள காந்தி, காமராஜர், வீர பாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் பாளை நீதிமன்றம் எதிரே உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம், டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு ஜொலித்தன.


 


இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்து நின்ற மாணவ-மாணவிகள்.

Tags:    

Similar News