உள்ளூர் செய்திகள்
டி.சி.ஆர். மருத்துவமனையில் சுதந்திர தின விழா
- விழாவிற்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி மற்றும் நர்சிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மருத்துவ மனை ஊழியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் ரஞ்சனா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இதய நோய் நிபுணர் டாக்டர் சக்திவேல் வையாபுரி, டாக்டர் உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் டாக்டர்கள் உதயசந்திரிகா, காமிலா, யுவதாரணி, முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி மற்றும் நர்சிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.