உள்ளூர் செய்திகள்

மார்க்கெட்டுக்கு பனங்கிழங்குகள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-12-13 15:10 IST   |   Update On 2022-12-13 15:10:00 IST
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 4 மாதங்கள் சீசன் சமயத்தில் பனங்கிழக்கு கிடைக்கும்.
  • சேலம் மாநகரில் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 4 மாதங்கள் சீசன் சமயத்தில் பனங்கிழக்கு கிடைக்கும்.

சேலம் மாநகரில் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா இறக்கம், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 இது குறித்து பனங்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், "பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசனிலும் நமக்கு இயற்கை ஒரு உணவை கொடுக்கும். அந்த உணவை நாம் கண்டிப்பாக சாப்பிட்டால் நோயற்ற வாழ்க்கை அமையும்.

பனங்கி–ழங்கை சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. மேலும் உடலுக்கு தேவையான இரும்பு, நார்ச்சத்து கிடைக்கும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கை இடித்து அதனுடன் பால் சேர்த்து சாப்பிடலாம். மேலும் கருப்பட்டி சேர்த்தும், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்தும் பனங்கிழங்கை சாப்பிடலாம். இவ்வளவு நன்மைகள் தரும் பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News