உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-06-22 14:57 IST   |   Update On 2022-06-22 14:57:00 IST
  • அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டது.
  • கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை, வரு வாய்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

கர்நாடகா மாநிலம் பெங்களுரு பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கிருஷ்ண கிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 1128 கனஅடியாக இருந்தது. நேற்று காலை 2.299 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.70 அடிக்கு தண்ணீர் உள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் பாதுகாப்பினை கருதி வினாடிக்கு 2,426 கனஅடி தண்ணீர், பிரதான மதகு வழியாகவும், 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை, வரு வாய்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News