உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்து பேசினார்.

மன்னார்குடி கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் திறப்பு

Published On 2023-08-27 10:08 GMT   |   Update On 2023-08-27 10:08 GMT
  • முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
  • முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

மன்னார்குடி:

மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

Tags:    

Similar News