தருமபுரியில் செல்வ மாளிகை புதிய நகைக்கடை திறப்பு விழா
- டி.என்.சி. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- மோதிரம், , ஆரம், மற்றும் நெக்லஸ் வகைகள் புதிய டிசைன்களில் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, ஸ்டேட் பேங்க் எதிரில் செல்வ மாளிகை புதிய நகைக்கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நகைக்கடையை தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வெங்கடேஞு் வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மீனா இளங்கோவன், உமாராணி ராஜசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் பரிசு பொருட்கள் என தனித்தனி பிரிவுகளுடன் இந்த புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். 916 ஹால்மார்க் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 தள்ளுபடி, உலகத்தரம் வாய்ந்த ஐ.ஜி.ஐ. தரச் சான்றிதழ் பெற்ற வைர நகைகளுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, ஹால்மார்க் வெள்ளி கொலுசுகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை மற்றும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் நிச்சய பரிசு என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செல்வ மாளிகை நகைக்கடை நிர்வாக இயக்குனர் எஸ். ராஜசேகரன் கூறுகையில், சேலத்தில் 73 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க எங்களது செல்வ மாளிகை நகை கடை வாடிக்கையாளர் களின் வசதிக்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அரூரில் புதிய கிளை தொடங்கப்பட்டது. தற்போது தருமபுரி நகரில் புதிய கிளையை தொடங்கி உள்ளோம்.
இந்த புதிய நகைக்கடை யில் பிரத்யேக திருமண நகைகள், இன்றைய தலை முறைக்கு ஏற்ற அனைத்து வகையான பி.ஐ.எஸ் 916 ஹால்மார்க் தரத்துடன் கூடிய தங்க செயின்கள், வளையல்கள், மோதிரம், காதணி, ஆரம், மற்றும் நெக்லஸ் வகைகள் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
தங்கத்தின் தரத்தினை உங்கள் கண்முன்னே கேரட் மீட்டரில் பரிசோதனை செய்யும் வசதியுடன் தொடங்கப்பட்டுள்ள எங்களது புதிய நகை கடையில் நகைகளுக்கு இலவச வாழ்நாள் பராமரிப்பு மற்றும் சிறந்த எக்ஸ்சேஜ் மதிப்பு வழங்கப்படுகிறது. எங்களது நகைக்கடையில் லக்கி கோல்டு தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் 11 மாதங்கள் பணம் செலுத்தி பல்வேறு சலுகைகள் மூலம் நகைகளை தேர்வு செய்யும் திட்டமும் அறிமுகப்படுத் தப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இந்த விழாவில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வுக்கான ஏற்பாடுகளை செல்வ மாளிகை நகைக்கடை நிர்வாக இயக்குனர் எஸ்.ராஜ சேகரன், நிர்வாக பொறுப் பாளர் ஆர்.மணியன், தருமபுரி கிளை மேலாளர் எஸ்.வினோத், பர்சேஸ் மேலாளர் ஏ. இருசப்பன் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.