உள்ளூர் செய்திகள்
விருத்தாசலத்தில் டீக்கடைக்காரர் திடீர் மாயம்
- விருத்தாசலத்தில் டீக்கடைக்காரர் திடீரென காணவில்லை.
- டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை.
கடலூர்:
விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் டீக்கடை வைத்து இருப்பவர் காளிதாஸ்(வயது 36). இவர் கடந்த 7-ந் தேதி மதியம் 3 மணி அளவில் டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன காளிதாசைத் தேடி வருகின்றனர்.