உள்ளூர் செய்திகள்
வேட்டாம்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விளக்க வாகன பிரசாரம் தொடக்கம்
- ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
- அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.