உள்ளூர் செய்திகள்

கலை இலக்கிய நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யத்தில், கலை இலக்கிய நிகழ்ச்சி

Published On 2023-08-08 09:28 GMT   |   Update On 2023-08-08 09:28 GMT
  • 1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
  • பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் புயல் குமார், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, கிளை தலைவர் தொல்காப்பியன், செயலாளர் குழந்தைவேலு, துணை தலைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தேத்தாக்குடி காசிராஜன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.

1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.

கவிஞர்கள் புவனேஸ்வரி, சவுமியா, சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

பெண்ணிய ஓவியங்களை வரைந்த செல்வி் அமிதா, நித்தியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

இதில் கவிஞர் வெற்றிச்செல்வன், அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, பேராசிரியர் மாரிமுத்து, வக்கீல் வைரமணி, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், செந்தில்நாதன், அமிர்த லிங்கம், சத்யராஜ், சமூக ஆர்வலர் வசந்தி செல்வ குமார், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, கவிஞர்கள் கார்த்திகேயன், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News