உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் போதைபொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

விழுப்புரத்தில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-28 08:43 GMT   |   Update On 2022-06-28 08:43 GMT
  • விழுப்புரத்தில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதில் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். எனவே இதிலிருந்து தமிழக மக்களை போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பலகைகளை ஏந்தி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இருந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் தயார் செய்து வைத்திருந்த குறுந்தகடினை மாவட்ட நீதிபதி பூர்ணிமா வெளியிட மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட கலெக்டர் மோகன் பெற்றுக் கொண்டனர்.

பேரணியில் நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்பி ரவி, சமூக நீதி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஆர்கே குபேரன், இ. எஸ் .கல்வி குழுமத்தின்நிறுவனத் தலைவர் புரவளர் சாமிக்கண்ணு, ஆய்வாளர் பத்மஸ்ரீ, உதவி ஆய்வாளர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News