உள்ளூர் செய்திகள்

கொரகுறுக்கி கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை ஒசூர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

Published On 2022-06-26 08:43 GMT   |   Update On 2022-06-26 08:43 GMT
  • கிருஷ்ணகிரி அருகே புதிய தார் சாலை அமைக்கும் பனி தொடங்கியது.
  • ஒசூர் எம்.எல்.ஏ . இந்த பணியை தொடங்கி வைத்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எ.செட்டிப்பள்ளி ஊராட்சி கொரகுறுக்கி கிராமத்தில் 82.75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமி ஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்பிரகாஷ் ,வடக்கு சூளகிரி வடக்குஒன்றிய செயலாளர் நாகேஷ், பி. டி.ஒ. சிவக்குமார், முன்னாள் வேப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன், ஊர்பிர முகர்கள்,சீதாராமைய்யா, லகுமநாயுடு ஜெகதீஸ் மற்றும் ஊர்கவுண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

Similar News