உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் ஓசூர் பேடரபள்ளி அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

Published On 2022-06-29 09:52 GMT   |   Update On 2022-06-29 09:52 GMT
  • தேசிய திறனாய்வுத்தேர்வில் 9 பேர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
  • தேர்வு தொடங்கி 8 ஆண்டுகளில், இதுவரை இப்பள்ளியில் படித்து 70 பேர் இத்தேர்வில் கல்வி ஊக்கத்தொகை பெற்றுள்ளது.

ஓசூர்,

ஓசூர் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியின் மாணவ, மாணவியர், 9 பேர் தேசிய திறனாய்வு தேர்வில்,மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9-ஆம் வகுப்பு முதல், பிளஸ் -2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

2021-22ம் கல்வி ஆண்டில், கடந்த மார்ச் மாதம், 5-ந்தேதி ஓசூர் ஆர்.வி.அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில், ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 15 பேர் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாவட்ட அளவில் 2 -ஆம் இடத்தை பெற்று மாணவியர் பாக்கியலட்சுமி, ஹேமாவதி, காவியா, ஓவியா, ராஜேஸ்வரி, ரோஷினி, யோகலட்சுமி மற்றும் மாணவர்கள் சுபாஷ் , ரோஷன் ஆகிய, 9 பேர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேர்வு தொடங்கி 8 ஆண்டுகளில், இதுவரை இப்பள்ளியில் படித்து 70 பேர் இத்தேர்வில் கல்வி ஊக்கத்தொகை பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. சாதனை மாணவ, மாணவியரையும், தலைமையாசிரியர் பொன்.நாகேஷ் மற்றும் மாணவ-மாணவியருக்கு பயிற்சி அளித்த ஆசிரியையர் மற்றும் ஆசிரியர்களையும், ஓசூர் வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டி வாழ்த்தினார்.

Similar News