உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

Published On 2022-11-09 09:33 GMT   |   Update On 2022-11-09 09:33 GMT
  • கம்பைநல்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
  • விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மொரப்பூர்,

மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், ஜெய்குமார்,செல்வி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கும்,காரில் சீட் பெல்ட்அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தும் தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின் பக்க சீட்டில் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிய வேண்டும், குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்,வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனவும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News