உள்ளூர் செய்திகள்

வழிப்பாதை பிரச்சினையில் இருதரப்பினர்கள் மோதல்; 6 பேர் மீது வழக்கு

Published On 2022-06-24 15:35 IST   |   Update On 2022-06-24 15:35:00 IST
  • இருதரப்பிரும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.
  • 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வடமலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (வயது65). இவருக்கும் இவரது தம்பி வெங்கடாசலம் என்பவருக்கும் இடையே வழிப்பாதை பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞானேஸ்வரன், வெங்கடாசலம் ஆகிய இருதரப்பிரும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஞானேஸ்வரன், ரஜினி, சந்தோஸ், சரவணன், சக்திவேல், வினோத்குமார் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News