உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பொதுமக்களிடம் குைறகளை கேட்டறிந்த காட்சி.

குறை தீர்க்கும் முகாமில் 106 மனுக்கள் பெறப்பட்டு 92 மனுக்கள் மீது உடனடி தீர்வு

Published On 2023-10-26 15:28 IST   |   Update On 2023-10-26 15:28:00 IST
  • அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடை பெற்றது.
  • 92 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை,குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடை பெற்றது.

வாராந்திர பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 106 மனு பெறப்பட்டு அதில் 92 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 14 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல்துறை கண்கா ணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வா ளர்கள் அன்பழ கன்,ஷர்மிளா பானு, ரங்கசாமி, மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News