உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் மிளகாய் செடி பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் வளர்த்த விவசாயி கைது

Published On 2022-11-02 15:13 IST   |   Update On 2022-11-02 15:13:00 IST
  • காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
  • தோட்டத்தில் மிளகாய் செடி பயிர்களுக்கு இடையே 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய 4 பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியூர் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன் பேரில் காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தொட்டியூர் கிராமத்தை சேர்ந்த தொட்டையா வயது 35 அவருடைய தோட்டத்தில் மிளகாய் செடி பயிர்களுக்கு இடையே 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய 4 பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து தேடி வந்த நிலையில் காட்டில் பதுங்கியிருந்த தொட்டைய்யா வை கைது செய்து ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News