உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் விதிமீறிய 5 ஆட்டோக்களுக்கு ரூ.2500 அபராதம்

Published On 2022-06-28 16:06 IST   |   Update On 2022-06-28 16:06:00 IST
  • போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை
  • 15 கிலோ மீட்டருக்குள் இயக்கலாம் என விதி மாற்றப்பட்டது.

ஊட்டி :

நீலகிரி மாவட்டத்தில் நகர பகுதிகளுக்குள் மட்டுமே ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் 15 கிலோ மீட்டருக்குள் இயக்கலாம் என விதி மாற்றப்பட்டது.

ஆனால் பல ஆட்டோக்கள் 25 கிலோ மீட்டர் உள்ள பைக்காரா வரை இயக்கபட்டு வந்தன. இதனால் டூரிஸ்ட் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அதிக அளவு சுற்றுலா பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிலை ஒன்று விஜயலட்சுமி பைக்காரா பகுதியில் திடீர்ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல ஆட்டோக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

சாலை விதியை மீறி குறிப்பிட்ட தூரத்திருக்கு மேல் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களுக்கு ரூ, 2500, அபராதத்தை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயலட்சுமி விதித்தார்.

குறிப்பிட்ட துரத்திற்கு மேல் ஆட்டோக்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். 

Tags:    

Similar News