உள்ளூர் செய்திகள்

ஆட்டை நாய் கடித்ததில்தகராறு- ஒருவர் கைது

Published On 2023-03-22 15:33 IST   |   Update On 2023-03-22 15:33:00 IST
  • இரு குடும்பத்தினரும் உறவினர்களாக இருந்த நிலையில் திருப்பதிக்கு சொந்தமான நாய் ராஜேந்திரன் ஆட்டை கடித்துள்ளது.
  • இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டையாளும், கையாலும் தாக்கினர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சாமபந்தமலை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது34).அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40),

இரு குடும்பத்தினரும் உறவினர்களாக இருந்த நிலையில் திருப்பதிக்கு சொந்தமான நாய் ராஜேந்திரன் ஆட்டை கடித்துள்ளது. இதனை அடுத்து இரு தரப்பும் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டையாளும், கையாலும் தாக்கியதில் இரு குடும்பத்தினரும் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கிருந்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், விமலா, திருப்பதி, மஞ்சு 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News