உள்ளூர் செய்திகள்
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தபடம்.
10-ம் வகுப்பு தேர்வில் ஆலேரஅள்ளி அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
- மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை.
- ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ஆலேரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.