உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், குடிநீர் வினியோகம் நிறுத்தம்
- நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.
- பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதிநகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
எனவே வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.