உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2022-11-27 10:11 GMT   |   Update On 2022-11-27 10:11 GMT
  • குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
  • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.

இதனை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் நாளை (திங்கள் கிழமை ) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News