உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கோபூஜை செய்தார்.

செம்பனார்கோவிலில், கால்நடை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

Published On 2023-01-31 07:19 GMT   |   Update On 2023-01-31 07:19 GMT
  • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
  • தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு புதிய கால் நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அமைச்சருக்கு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் பூரண கும்பம் வரவேற்பு அளித்தார்.

விழாவில் பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கோட்ட கால்நடை மருத்துவ இணை இயக்குநர் ஈஸ்வரன், கால்நடை மருத்துவர் அன்பரசன், திமுக துணை செயலாளர் ஞான வேலன், பி.எம்.சீதர், ஒப்பந்ததாரர் மயிலாடுதுறை கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், துணை தலைவர் உமாராணி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News