சேலத்தில், பிளஸ்-1, 2 பொதுத்தேர்வுகளுக்குமுதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம்
- சேலம் மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- இதேபோல் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருப்பார்கள்.
ேசலம்:
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 14-ந்தேதி முதல் பிளஸ்-1 தேர்வுகளும், அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வும் ெதாடங்குகிறது.
சேலம் மாவட்டம்...
சேலம் மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அறை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்–பாளர்கள், வழித்தட அலு–வலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தேர்வு செய்து, பணி ஒதுக்கீடு, செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணிகளை பொறுத்தவரை பெரும்பாலும் முதுகலை ஆசிரியர்களே ஈடுபடுத்தப்–படுவார்கள். கூடுதல் தேவை ஏற்படும் நிலையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதேபோல் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்–பாளர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருப்பார்கள். இதனிடையே நடப்பாண்டு மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் புதிதாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் முதன்மை கண்கா–ணிப்பாளர் பொறுப்பிற்கு போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடப்பாண்டு மேல்நிலைப்–பள்ளிகளில் பணிபுரிந்து வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பா–ளர்களாக நியமித்துக்–கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி–யுள்ளது.
முதன்மை கண்காணிப்பாளர்கள்
அதனை ெதாடர்ந்து சேலம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் இல்லாத தேர்வு மையங்களில் முதன்ைம கண்காணிப்–பாளர்களாக மூத்த முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பள்ளிக்–கல்வித்துறை மும்முரமாக செய்து வருகிறது.