உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 19 பேருக்கு கொரோனா

Published On 2022-06-28 08:57 GMT   |   Update On 2022-06-28 08:57 GMT
  • கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
  • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

ஏற்கனவே மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 பேரில் 6 பேர் குணமாகினர். தற்போது 86 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் அனைவருக்கும் பரிசோதைனையை செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாய–மாக்–கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியா–தவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News