உள்ளூர் செய்திகள்

 மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில், சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-15 07:30 GMT   |   Update On 2023-02-15 07:30 GMT
  • சார்பதிவாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களை பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும், பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்ச உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப் பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார்.

இளையபெருமாள் வெங்கடேஷ் பால சரவணன் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலக சங்கத்தினர் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News