உள்ளூர் செய்திகள்

மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-09-10 09:44 GMT   |   Update On 2022-09-10 09:44 GMT
  • கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினர்.
  • கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

பாலக்கோடு,

பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவில் மகாகும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 7-ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை யாகசாலையில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு யாகங்கள் நடந்தேறியது.

அதனை தொடர்ந்து கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், புண்யா ஹவாசனம், கோ பூஜை , மூலவர் அபிஷேகம் நடைப்பெற்றது.

இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் நிர்வாகிகள் எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டின ர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து எல்லம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெல்ரம்பட்டி, சீரியம்பட்டி, சோக்காடி, பொப்பிடி ஆகிய கிராமத்தை சேர்ந்த குலதெய்வ குடும்பத்தார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News