உள்ளூர் செய்திகள்

குனியமுத்தூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்

Published On 2022-06-07 09:47 GMT   |   Update On 2022-06-07 09:47 GMT
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  • நெடுஞ்சாலை துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

குனியமுத்தூர்,

கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் அடுத்த பி .கே .புதூர் அருகே மெயின் ரோட்டிலிருந்து குறுக்குச்சாலை யாக குளத்துப்பாளையம் பிரதான சாலை உள்ளது .அந்த வழியாக குளத்துப்பாளையம் மற்றும் கோவைபுதூர் ஆகிய பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில் பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலை சந்திப்பில் மின் கம்பம் ஒன்றும் மரம் ஒன்றும் உள்ளது. சந்திப்பில் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை திருப்புவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மெயின் ரோட்டிலிருந்து செல்லும் வாகனமும், குறுக்குச் சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வாகனமும்,ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. மின் கம்பம் மற்றும் மரத்தை அகற்றினால் வாகனங்கள் சிரமம் இன்றி திரும்பக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திலும், தெற்கு மண்டல அலுவலகத்திலும், நெடுஞ்சாலை துறையிலும் ஏற்கனவே புகார் அனுப்பியுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையினரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த மின்கம்பம் மற்றும் மரம் அகற்றப்படவில்லை எனவே பெரிய அளவில்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் மரத்தையும், மின்கம்பத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News