உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் பகுதியில் மது, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

Published On 2023-04-26 07:33 GMT   |   Update On 2023-04-26 07:33 GMT
  • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.

அப்போது மது விற்றதாக கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். வட்டமலை பகுதியில் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமை யாளர்கள் முருகையன், இளங்கோ ஆகியோரையும், நாராயணநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த சண்முகம் எனபவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News