கிருஷ்ணகிரியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம்
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
3 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர் உள்பட அனைவருக்கும் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியருக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய ஊழியருக்கு பின்பாக்கி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மத்திய அமைப்பு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆத்மநாதன், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், விஜயன், கோவிந்தராசன், சிவலிங்கம், சிவா, சிவசங்கர், அழகேசன், வீராஜி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மல்லையன் நன்றி கூறினார்.