உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

Published On 2022-11-05 13:35 IST   |   Update On 2022-11-05 13:35:00 IST
  • ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
  • பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.

கிருஷ்ணகிரி,

பள்ளிக்கல்வித்து றையின் சார்பில், மாவட்ட அளவிலான அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் (ஸ்டெம்) குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் நாராயணன் பயிற்சி குறித்து பேசினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மாநில அளவிலான ஒருங்கி ணைப்பாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சேதுராமன், மாவட்டத் தலைவர் சர் ஜான், மாவட்ட செயலாளர் சந்தோஷ், இந்திய வளர்ச்சிக் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

வட்டாரக் கல்வி அலுவலர் ஜார்ஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சு ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.

ஸ்டெம் திட்டத்தின் பற்றிய அறிமுகம், செயல்பாடு, தொடர் பணிகள் போன்றவை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News