உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-08-19 15:14 IST   |   Update On 2022-08-19 15:14:00 IST
  • கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1 மற்றும் பகுதி 2, பழையபேட்டை, காட்டிநாய னப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி.டேம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், கூலியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News