உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை தாக்கிய மர்ம நபர்கள்

Published On 2022-11-03 15:15 IST   |   Update On 2022-11-03 15:15:00 IST
  • அங்கு பீடி வாங்குவதற்காக 4 பேர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
  • அந்த மர்ம நபர்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் வெங்கடாசலம், பார்த்திபன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் பார்த்திபன் (வயது34). இவர் அப்பகுதியில் மளிகை, செல்போன் கடைகள் நடத்தி வருகிறார்.

நேற்று மளிகை கடையில் தனது நண்பரிடம் வெங்கடாசலம் பேசி கொண்டிருந்தார். அங்கு பீடி வாங்குவதற்காக 4 பேர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் வெங்கடாசலம், பார்த்திபன் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News