உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி பள்ளியில் மாணவிகள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு
- தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
அரவேனு
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு கோத்தகிரி போலீஸ் நிலையம் சார்பில் போக்சோ சட்டம் மற்றும் போதை பொருட்கள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்ர் சேகர் மற்றும் போலீசார் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, சமூக வலைதளங்களை மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போலீசார் வழங்கினர். இதில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.