கெலமங்கலம் யூனியனில் தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
- கெலமங்கலம் யூனியனில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
- இதில் போட்டியிட தி.மு.க.சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் 12 -வது வார்டில் சி.பி.ஐ., கட்சி சார்பில் போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற அனிதா அபிராம்மைய்யா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார்.
அதனால் 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20-ம் தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கியது.
தி.மு.க., சார்பில் மாரப்பா என்பவர் 12-வது வார்டில் போட்டியிட தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் எம்.எல்.ஏ.,வுமான ஒய்.பிரகாஷ் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். அதை தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலருமான சென்னகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சாந்தலட்சுமி, கெலமங்கலம் ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் கிழக்கு சின்னராஜ், மேற்கு ஸ்ரீதர், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.