மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
காவேரிப்பட்டணத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
- பகல் நேரங்களில் மதுகுடித்து விட்டு வீட்டில் குடிமகன்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
- இது பற்றி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மதுகுடித்து விட்டு வீட்டில் குடிமகன்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது பற்றி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திருட்டு தனமாக நடக்கும் மதுவிற்பனையை முற்றிலும் தடை செய்யப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இங்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள்.
இதனால் இப்பகுதியில் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. கு
டித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள கள்ளத்தனமாக மது விற்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.