உள்ளூர் செய்திகள்
காரிமங்கலத்தில்10- வகுப்பு மாணவி உள்பட 2 பேர் மாயம்
- கடந்த 20-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
- காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்க சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் (வயது21). இவர் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் ஓசூர் தனியார் கார்மென்சில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15-ம் தேதி வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காரிமங்கலம் அருகே உள்ள மல்லி குட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 20-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.