உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-10-22 14:58 IST   |   Update On 2022-10-22 14:58:00 IST
  • சீருடை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
  • உடை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

இதில் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர்.மனோகரன் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் உடை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News