உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் குடிசை வீடு தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலி

Published On 2023-04-02 13:53 IST   |   Update On 2023-04-02 13:53:00 IST
  • நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது.
  • வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள திம்ம ராஜம் பேட்டை ஊராட்சி, சீயமங்கலம் காலனியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்தனர். இதையடுத்து நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவர் வெங்கடேசின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது. இதில் வெங்கடேசும், சரவணனும் சிக்கிக்கொண்டனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயில் இருந்து தப்பி முயன்றனர். இதில் சரவணன் லேசான தீக்காயத்துடன் தப்பி வெளியே வந்தார். ஆனால் வெங்கடேஷ் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் பலியான வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News