உள்ளூர் செய்திகள்

ஓசூரில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு

Published On 2022-07-28 09:47 GMT   |   Update On 2022-07-28 09:47 GMT
  • சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
  • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள அலசநத்தம் லட்சுமி நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சலஜா (வயது56). இவர் கடந்த 24-ந் தேதி அன்று அப்பகுதியில் உள்ள சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News