உள்ளூர் செய்திகள்

ஓசூர் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய போது எடுத்த படம்.

ஓசூர் அரசு பள்ளிகளில் 536 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி- பிரகாஷ் எம்.எல்.ஏ மேயர் சத்யா பங்கேற்பு

Published On 2022-08-18 15:42 IST   |   Update On 2022-08-18 15:42:00 IST
  • பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
  • 536 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி ஓசூர் முல்லைநகர் பகுதியில் சீதாராம் நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், மாநகராட்சி மேயர் .சத்யா ஆகியோர் கலந்து கொண்டு, அரசு மேல்நிலைப்பள்ளியில் 286 மாணவ, மாணவியர், உருது பள்ளியில் 71 பேர் மற்றும் புனித ஜான்போஸ்கோ பள்ளியில் 179 பேர் என மொத்தம் 536 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினார்கள்.

மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், தலைமையாசிரியர்கள் அலெக்சாண்டர், தேவசேனா, புனித ஜான் போஸ்கோ பள்ளி தாளாளர் ஆஞ்சலா, பெற்றோர்கள், ஆசிரியர் கழக தலைவர்கள் மகேஷ்பாபு, அப்துல் முஜீப், முன்னாள் தலைவர் ரெட்டி, ஆசிரியர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News