உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- கிருபானந்த வாரியார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி கிருபானந்த வாரியார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தொழில் அதிபர்கள் பிரதீப் குமார், கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சமூக ஆர்வலர் பானுமதி வரவேற்றார்.
இந்த முகாமில் ராஜேஷ் கண் பரிசோதனை மைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் பள்ளித் தாளாளர் சுரேஷ், நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், முதல்வர் வாணி ஸ்ரீதர், தலைமை ஆசிரியை தீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.