உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-19 15:37 IST   |   Update On 2023-04-19 15:37:00 IST
  • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணி வரன்முறையை செய்திட வேண்டும்.
  • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறையை ஒரு மாத காலம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல், முழு தொகையாக உடனடியாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணி வரன்முறையை செய்திட வேண்டும். மேலும் அங்கன்வாடி மையப் பணிகளுக்கு வழங்கப்பட்ட செல்போன்கள் பழுதாகியுள்ளதால், புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல், மாவட்ட பணியிட மாறுதல் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News