உள்ளூர் செய்திகள்

கோவையில் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர்

Published On 2023-03-23 12:07 GMT   |   Update On 2023-03-23 12:07 GMT
  • ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
  • தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை:

கோவையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட 2 கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குரங்கு ஸ்ரீராம், கோகுல் ஆகியோர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர்.

போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்ததும் மாநகர போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை தொடர்ச்சியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ஏற்கனவே வீடியோ வெளியிட்டு கைதான கவுதம் என்பவருடன் தொடர்பில் இருந்த கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த சுகந்தாராம் (வயது 26) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியுடன் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் அவர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலைமிரட்டல், கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதனையும் மீறி சுகந்தாராம் கத்தியுடன் வீடியோ வெளியிட்டு உள்ளதால் போலீசார் அவர் கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News