உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் பணத்தகராறில் வாலிபருக்கு வெட்டு

Published On 2023-08-28 09:03 GMT   |   Update On 2023-08-28 09:03 GMT
  • பலத்த காயமடைந்த சதிஷ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

கொடுங்கையூர், முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(35).கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது நண்பரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு வந்தார்.

அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சதிஷ்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சதிஷ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். செல்போன் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி சென்ற சதிஷ்குமார் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் மணிகண்டன் அவரை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News