சூளகிரி தாலுகா பகுதியில் ரூ.17.48 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ரூ.17.48 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்.
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமானம் பராமரிப்பு ஒசூர் கோட்டம் சார்பில் சூளகிரி பேரிகை சாலை முதல் தீர்த்தம் பேரிகை வழியாக கும்பளம் வரை அகலபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.17.48 கோடி செலவில் நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஒன்றிய செயலாளர் நாகேஷ், பர்கூர் எம்.எல்.ஏ.,மதியஅழகன், ஓசூர் மேயர் சத்தியா, முன்னால் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஒசூர் சப்- கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் தேன்மொழி, கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் தனசேகரன், ஓசூர்உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், சாலை பணி ஒப்பந்ததாரர் ஜெமினி அன்கோ ஜெயபிரகாஷ், மாவட்ட ஊராட்சி குழுசேர்மன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், சின்னராஜ், மற்றும் பொதுக்குழு வீராரெட்டி, மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், மணி,ராஜேந்திரன், மாரிமுத்து, சிவராஜ், ஹரி, முனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.