உள்ளூர் செய்திகள்

சிக்கதிம்மன அள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅன்பழகன் பணியை தொடங்கி வைத்தார்.

சிக்கதிம்மன அள்ளி கிராமத்தில் ரூ.4.63 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச் சுவர் கட்டும் பணி

Published On 2022-07-28 09:32 GMT   |   Update On 2022-07-28 09:32 GMT
  • ரூபாய் 4.63 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅன்பழகன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சியில் சிக்கதிம்மன அள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.63 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅன்பழகன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முனிரத்தினம், பூஞ்சோலை ஊராட்சி செயலாளர் மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News