உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் வித்யா பாலா பீடத்தில் நடைபெற்ற கால சர்ப்ப மகாயாகம்.

சிதம்பரத்தில் கால சர்ப்ப மகாயாகம்

Published On 2023-10-09 10:01 GMT   |   Update On 2023-10-09 10:01 GMT
  • ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது
  • ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர்

கடலூர்:

சிதம்பரம் நடராஜர் நகர் ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் மகா திருபுரசுந்தரி சந்நிதியில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணிக்கு ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர். இதனை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினர் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவித்தியா பாலா பீட நிறுவனர் செல்வரத்தின தீட்சிதர் செய்திருந்தார்.

Tags:    

Similar News