உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

Published On 2023-09-16 09:48 GMT   |   Update On 2023-09-16 09:48 GMT
  • நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
  • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

அதிராம்பட்டினம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பன்னீர் செல்வம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

அதிராம்பட்டினம் நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களில் செ ல்வோரை பின் தொடர்ந்து சென்று துரத்துகிறது.

இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களை சில நாய்கள் கடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News