உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை
- குடும்ப தகராறில் பெண் தூக்கில் தொங்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ஜோதி(வயது30).
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து ஜோதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தூக்கில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.