உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி

Published On 2023-01-18 04:56 GMT   |   Update On 2023-01-18 04:56 GMT
  • சிறுமியை முருகன் வீட்டில் இருந்து அழைத்து சென்றார்.
  • தஞ்சாவூரில் தனியாக குடித்தனம் நடத்த வீடு தேடினர்.

நாமக்கல்:

தஞ்சாவூரை சேர்ந்தவர் முருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியை முருகன் வீட்டில் இருந்து அழைத்து சென்றார். பின்னர் தஞ்சாவூரில் தனியாக குடித்தனம் நடத்த வீடு தேடினர். ஆனால் அங்கு யாரும் வீடு கொடுக்கவில்லை. இதனால் மனமடைந்த 2 பேரும் நேற்று நாமக்கல்லுக்கு வந்தனர்.

நாமக்கல்லில் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த அந்த பகுதியினர், நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தஞ்சாவூரில் இருந்து வந்த அவர்களது உறவினர்கள், 2 பேரையும் தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News